தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்ட் ஹோட்டலில் உணவு அருந்திய பின்னர் விமான மூலம் சென்னை செல்கிறார்.
முன்னதாக திருச்சி ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், அதிமுகவிற்கு திமுக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு.
என்ன பாத்தா பயந்த மாதிரி உங்களுக்கு தெரிகிறதா.. ? எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும், உலகத்திற்கே தெரியும், பாஜகவிற்கு அடிமை அதிமுக தான் என்று.
எங்களுடைய தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது. கர்நாடகாவில் தண்ணீர் குறித்து கேட்டு முதல்வர் பெற்று தருவாரா என்ற கேள்விக்கு..
கண்டிப்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு தேதியும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி வழக்கிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இது குறித்த கேள்விக்கு, நான் நிகழ்ச்சிகள் இருந்ததால் இதனை பார்க்கவில்லை. ஆளுநர் இன்று டெல்லி செல்கிறார் என்ற கேள்விக்கு..
அவருக்கு வேறு வேலைகள் இல்லை. அதனால் தான் டெல்லி சென்று சென்று வருகிறார் என தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.