Categories: தமிழகம்

எங்களை பார்த்து பாமகவுக்கு பயமா? தோல்வி பயத்துல ஏன் பம்மறீங்க : சீறும் திமுக அமைச்சர்!!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சேலம் கோவிந்தராஜ் தலைமை கழக பேச்சாளர் அகத்தியர் ஆன்மா என்ற தலைப்பில் அகத்தியர் வேஷம் இட்டு பனையபுரம் காலனி பகுதிகளில் வீதியில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்,

இவருடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஐ என் டி ஐ ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எங்களைப் பொறுத்தவரை 10.5% இட ஒதுக்கீடை சட்ட உரிமையோடு பெற்று தர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நோக்கம் எங்கும் தடைபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் சட்ட உரிமையோடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,.

மத்திய 2021 ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும் அவர்கள் எடுக்கவில்லை, இடைத்தேர்தல் என்றாலே மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு உரிமை உண்டு, அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம்,

எந்த தேர்தல் எடுத்துக் கொண்டாலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் அதனை புறக்கணிக்க மாட்டார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் வடமாநிலத்தில் இருந்து பலரையும் கொண்டு வந்து இந்த தொகுதியில் குவித்து வைத்துள்ளனர்,

அதை நாங்கள் யாரும் குற்றம் என்று சொல்லவில்லை, எங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆள் இருக்கிறார்கள் அதனால் வருகிறார்கள், நாங்கள் குவிந்துள்ளோம் என கூறுவது தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடியிருக்கிரார்கள் என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.