விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் வெளிநாட்டினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஆரோவில் ஃபவுண்டேஷன் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. மேலும் அதன் அருகிலும் பல ஏக்கர்கள் தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமாக வும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார்.
அந்த இடம் ஆரோவிலுக்கு சொந்தம் என சில ஆரோவில் உள்ள வெளிநாட்டினர் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
உடனே போலீசார் சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வெளிநாட்டினர் ஆரோவில் வாசிகள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆரோவில் போதிய ஆதராம் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று தனியாருக்கு சொந்தமான இடம் என அவரது தரப்பினர் வேலி அமைக்க முற்பட்ட போது 100 மேற்பட்ட வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதனால் தனியார் இட உரிமையாளர் தரப்புக்கும் ஆரோவில் வாசிகளுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.