திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 30).
வெல்டரான இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது மதியம் 2 மணியளவில் செல்போனுக்கு வந்த அழைப்பையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது நண்பர்களான செல்வா (வயது 26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருடன் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.
பின்னர் நண்பர்களுடன் அதே பகுதியில் மது அருந்துவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு பின்புறம் கொள்ளமேட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மதுபோதையில் தகராறு முற்றியதால் அவர்களுக்கிடையே வாய் தகராறு மோதலாக மாறியுள்ளது. அப்போது செல்வா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வேலு ரத்தவௌ்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துப்பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், இமானுவேல் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வில்லிவாக்கத்தில் வசித்து வந்த வேலு மீது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஆகியவை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதனால் தொட்டிக்கலை பகுதியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது அருந்தியபோது சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வெல்டரை அவரது நண்பர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சைடிஷ்க்காக நடந்த கொலையா அல்லது வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலுவை தீர்த்துக்கட்ட யாரேனும் சதி திட்டம் போட்டு இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.