Categories: தமிழகம்

மது அருந்தும் போது சைட் டிஷ் வாங்குவதில் தகராறு : போதையில் நண்பனை வெட்டிக்கொலை செய்த சக நண்பர்கள்.. விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்!!

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 30).

வெல்டரான இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது மதியம் 2 மணியளவில் செல்போனுக்கு வந்த அழைப்பையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தனது நண்பர்களான செல்வா (வயது 26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேருடன் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு சென்றனர்.

பின்னர் நண்பர்களுடன் அதே பகுதியில் மது அருந்துவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு பின்புறம் கொள்ளமேட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது சைடிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மதுபோதையில் தகராறு முற்றியதால் அவர்களுக்கிடையே வாய் தகராறு மோதலாக மாறியுள்ளது. அப்போது செல்வா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே வேலு ரத்தவௌ்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துப்பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், இமானுவேல் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வில்லிவாக்கத்தில் வசித்து வந்த வேலு மீது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கு, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஆகியவை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனால் தொட்டிக்கலை பகுதியில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது அருந்தியபோது சைடிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வெல்டரை அவரது நண்பர்களே வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சைடிஷ்க்காக நடந்த கொலையா அல்லது வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலுவை தீர்த்துக்கட்ட யாரேனும் சதி திட்டம் போட்டு இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

12 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

12 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

13 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

13 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

13 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

14 hours ago

This website uses cookies.