குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானை உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. யானையின் உடல் மெலிந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது,மேலும் தினசரி யானை குறித்த வெவ்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற சமூக ஆர்வலர் தலைமையில் அரி கொம்பன், ஃபேன்ஸ் அமைப்பு என்ற பெயரில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- அரிகொம்பன் யானை குறித்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மிகவும் வேதனை அடைகிறோம். யானை மிகவும் உடல் மெலிந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது, எனவே குமரி மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் அரி கொம்ப யானை குறித்து சரியான தகவலை தர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.