குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானை உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. யானையின் உடல் மெலிந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது,மேலும் தினசரி யானை குறித்த வெவ்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற சமூக ஆர்வலர் தலைமையில் அரி கொம்பன், ஃபேன்ஸ் அமைப்பு என்ற பெயரில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- அரிகொம்பன் யானை குறித்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மிகவும் வேதனை அடைகிறோம். யானை மிகவும் உடல் மெலிந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது, எனவே குமரி மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் அரி கொம்ப யானை குறித்து சரியான தகவலை தர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.