அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் நகர பகுதியைச் சேர்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17), சண்முகம் (23) ஆகிய நான்கு பேரும் அரியலூரில் ஹோம நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் நோக்கி காரில் பயணம் செய்தனர்.
அப்போது, ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது கார் கட்டுபாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதில் இந்த நான்கு பேரும் சம்பவ பலியானார்கள். இவர்கள் நான்கு பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கழுத்தில் இறுக்கப்பட்ட கம்பி… ஜெயக்குமார் தனசிங் திட்டமிட்டே கொலை… பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்..!
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் நான்கு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.