தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மேலும், தேங்காய்க்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்தல், சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்குதல், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டால் 1க்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.
ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரிகள் அமைப்பதையும் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் குருநாதன், மாநில செயலாளர் மகேந்திரன், துணைப்பொதுச்செயலாளர் தங்கமுத்து, மாநில செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் விவசாயிகள் மண்டை ஓட்டுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.