கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சலில் ராணுவ வீரரின் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷா (24). எம்.சி.ஏ பட்டதாரியான இவருக்கும், தக்கலை சாரோடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான சுபின் என்பவருக்கும் இடையே கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன் ஷேர் சேட் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஷேர் சேட்டில் பழகி வந்த நிலையில், பழக்கம் காதலாக மாறி, ஒருவொருக்கொருவர் நேரடியாக சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஜெனிஷாவின் பெற்றோரிடம் நேரடியாக சென்ற சுபின் ஜெனிஷாவை காதலிப்பதாக கூறி பெண் கேட்டுள்ளார். ஜெனிஷா வின் பெற்றோரும் சம்மதித்து காதலுக்கு பச்சை கொடி காட்டவே, அடிக்கடி ஜெனிஷா வீட்டிற்கு செல்லும் சுபின் அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
ஆனால், இந்த காதல் விவகாரம் சுபினின் பெற்றோருக்கு தெரிய வரவே, இவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்த போதிலும் இருவரும் டெலிகிராமில் பேசி வந்துள்ளனர். அதன் பின்னர், கடந்த ஒரு மாதமாக ஜெனிஷாவிடம் சுபின் சரியாக பேசாமல் தவிர்த்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், சென்னையில் ராணுவ பணியில் இருந்த சுபின் தனது சொந்த ஊருக்கு வருவதாக ஜெனிஷாவிற்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், அதற்கு பின் சுபின் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த ஜெனிஷா விசாரித்த போது, சுபினுக்கு வேறொரு பெண்ணுடன் ஜனவரி 23ம் தேதி திங்கட்கிழமையான நேற்று திருமணம் நடைபெறப் போவதாகவும், அதற்கான திருமண அழைப்பிதழ்களும், உறவினர்களுக்கு வழங்கி திருமண முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சுபினின் வீட்டிற்கு சென்று ஜெனிஷா முறையிட்ட நிலையில் யாரும் கண்டு கொள்ளாமல் துரத்தியுள்ளனர்.
இதனால் விரக்தியடைந்த ஜெனிஷா, நேரடியாக நேற்று காலை மணப்பெண் வீட்டிற்கு சென்று, தான் சுபின்-ஐ காதலிப்பதாக கூறி, இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை காண்பித்து, நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
அதோடு, சுபின் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனிமையில் இருந்ததோடு, தற்போது தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார், ராணுவ வீரர் சுபின் மீது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, நம்பிக்கை மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்த சுபின் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.