திருவள்ளூர் : கவரைபேட்டை அருகே சினிமா சூட்டிங்கின் போது 30 அடி உயரத்தில் இருந்து லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை அருகேயுள்ள ஐயர் கண்டிகை கிராமத்தில்
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு சொந்தமான பிலிம்சிட்டி ஸ்டுடியோவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, ஒலிப்பதிவு அரங்கத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (47) என்பவர் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார். அங்கு திரைப்படத்திற்காக நடைபெற்ற பணியின் போது, சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில், பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கவரைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்பட நடிகர் சத்தியராஜ் நடிக்கும் வெப்பன் திரைப்படத்திற்கான பணியின் போது லைட்மேன் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பாக அங்கு அவருடன் பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.