Categories: தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது : அதிமுகவினர் கொந்தளிப்பு.. மதுரையில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது : அதிமுகவினர் கொந்தளிப்பு.. மதுரையில் பரபரப்பு!

மதுரை திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டியில் தனியார் உரத் தொழிற்சாலை கழிவுகள் வெளியேறுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் கழிவுகளால் இப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இந்த உரத் தொழிற்சாலையை மூடக்கோரி கே. சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம், ஆவல் சூரன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து வாக்கை பதிவு செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஐந்து கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் 5050 வாக்குகள் உள்ள நிலையில் நடைபெற்ற தேர்தலில் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

p> மேலும் படிக்க: பிரச்சார மேடையில் பேசும் போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி : மருத்துவமனையில் அனுமதி.. ஷாக் VIDEO!

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் குணசேகரன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதில் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக தொழிற்சாலை பின்பற்றுவதாக பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி சந்திப்பில் பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

11 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

13 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

13 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

14 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

14 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

15 hours ago

This website uses cookies.