தமிழகம்

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 4ல்நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இதையும் படியுங்க: கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி வருண் குமார் கடந்த மாதம் 19ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் சீமான் சம்மனை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இருவரும் மீண்டும் ஏப்ரல் மாதம் 7ந் தேதி இன்று ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை அவரது சார்பாக அவரது வழக்கறிஞர் மட்டுமே வருகை தந்திருந்தனர். வழக்கில் இன்று மாலை 5மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிடில் சீமானுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சீமான் ஆஜர் ஆகிறாரா அல்லது அவரது வழக்கறிஞர் மூலமாக காரணங்கள் ஏதும் மனுவாக வழங்கி வேறு ஒரு நாளில் ஆஜர் ஆவாரா என்பது சில மணி நேரங்களில் தெரியவரும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.