புரட்சி ழகம் கட்சி தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி சமீபத்தில் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, அவர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தினர்.
டிஜிபி அலுவலகம் அருகே காலணிகளால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு போலீஸ்காரர் இருந்தும் ஒரு பயனில்லை. இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார், போலீசில் புகார் அளித்தால், நிலைமை சரியில்லை, நீங்கள் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள் என கூறுகின்றனர்.
என்னிடம் கத்தி இருந்திருந்தால், விசிகவினரை வெட்டி வீசியிருப்பேன், திருமா நள்ளிரவு 2 மணிக்கு லுங்கியுடன் சுற்றி வருகிறார். அவர் பெசன்ட் நகருக்கு ஆட்டோவில் வருவது தெரியும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர் புகார் அளித்தனர். அதில் விசிகவினர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
இதையடுத்து ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்தனர். கைது செய்த போது, ஏர்போர்ட் மூர்த்தி நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்தார். உடனே அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.