புதுச்சேரி : புதுச்சேரியில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மூதாட்டியிடம் தாலி செயினை பறித்து சென்ற திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (60). இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது, அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், செல்வராணி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதில் எழுந்த செல்வராணி அலறியுள்ளார். இவரது சத்தம் பேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். இதையறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அவரை பொதுமக்கள் பிடித்து வில்லியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து செல்வராணியின் மகன் ராமஜெயம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும், இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து பாலகிருஷ்ணனை போலீசார் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.