ஏற்கனவே சொன்ன மாதிரி இது தற்காலிகம்தான் : காத்திருப்புக்கு பலன் கிடைக்கும்.. தனுஷ் விவாகரத்து குறித்து கஸ்தூரி ராஜா!!!

தமிழ் சினிமாவை 48 வருடங்களாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி . தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர். 70 வயதானாலும் சினிமாவில் வெற்றியை ருசித்து வரும் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல துன்பங்கள் நெருடி வருகிறது.

இளைய மகள் சௌந்தர்யாவின் வாழ்க்கையால் சந்தோஷத்தை இழந்த ரஜினி, முதல் கணவரை பிரிந்த சௌந்தர்யாவுக்கு இரண்டாவதாக நல்ல வரன் அமைந்ததால் சற்று நிம்மதியடைந்தார். ஆனால் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் பிரிவால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளார் ரஜினி.

நன்றாக சென்ற ஐஸ்வர்யா தனுஷ் வாழ்க்கையில் இடையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஆனால் எல்லாவற்றையும் ரஜினி சமாளித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை ரஜினி பேசி சமாதானம் செய்தார்.

இந்த நிலையில் இருவரின் பிரிவு வெறும் தற்காலிகமே என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அண்மையில் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை பேசியும் இருவரும் பிடிகொடுக்கவில்லை.

சரி நாட்கள் உருண்டோட எல்லாம் சரியாகிவிடும் என கஸ்தூரி ராஜா காத்திருந்து வருகிறார். ரஜினி சம்மந்தி என்ற பெரிய அந்தஸ்தில் உள்ள கஸ்தூரி ராஜா, ரஜினி குடும்பத்திற்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.

இதனால் அவ்வப்போது தனுஷ்க்கு போன் செய்து ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தி வருகிறார். ஆனால் அவர் சரி சரி என சொல்லிவிட்டு இதைபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தனது படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறப்படுகிறது.

எத்தனை தடவ சொன்னாலும் மகன் பிடி கொடுக்க மாட்டிங்கிறானே என்ற வருத்தத்தில் உள்ளாராம் கஸ்தூரி ராஜா. தற்போது மாறன் படத்திற்காக மெனக்கெட்டு வரும் தனுஷிடம் கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாகவும், மகன்களுக்காக இருவரும் மீண்டும் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் விரைவில் வீட்டுக்கு வருகிறேன் என்றும், நல்ல முடிவு கூறுவதாக தனுஷ் சொல்லிவிட்டு போனை கட் செய்துள்ளார்.

இதனால் இந்த முறை மகன் நிச்சயம் சேர சம்மதம் கொடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் கஸ்தூரி ராஜா. எது எப்படியோ இவர்கள் சேர்ந்தால் போதும் என அவர்களது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

42 minutes ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

1 hour ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

3 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

4 hours ago

This website uses cookies.