திருப்பூர் : திருப்பூரில் அரசு பேருந்தில் நடத்துனரின் மணிபர்ஸை மர்மநபர் திருடியதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துனரான ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலை கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டு, பேருந்திலிருந்த பெரும்பாலான வடமாநில இளைஞர்களிடம் நடத்துடனர் மற்றும் ஓட்டுனர் மணிபர்ஸ் குறித்து சோதனை நடத்தினர்.
அதே போல் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை மேற்கொண்டும் கடைசிவரை மணிபர்ஸ் கிடைக்காததால், நடத்துனர் ரங்கசாமியோ பயணிகளிடம் பர்ஸில் அடையாள அட்டை, நடத்துனர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 பணம் இருக்கிறது பணத்தை எடுத்துவிட்டு மணிபர்ஸை பேருந்தில் போட்டுவிடுங்கள் என கூறிவிட்டு மீண்டும் பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, அரசு பேருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.