திருப்பூர் : திருப்பூரில் அரசு பேருந்தில் நடத்துனரின் மணிபர்ஸை மர்மநபர் திருடியதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளிடம் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துனரான ரங்கசாமி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலை கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டு, பேருந்திலிருந்த பெரும்பாலான வடமாநில இளைஞர்களிடம் நடத்துடனர் மற்றும் ஓட்டுனர் மணிபர்ஸ் குறித்து சோதனை நடத்தினர்.
அதே போல் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உதவியுடன் வடமாநில இளைஞர்களிடம் இருந்த பைகளில் சோதனை மேற்கொண்டும் கடைசிவரை மணிபர்ஸ் கிடைக்காததால், நடத்துனர் ரங்கசாமியோ பயணிகளிடம் பர்ஸில் அடையாள அட்டை, நடத்துனர் உரிமம் அட்டை, ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரூ.300 பணம் இருக்கிறது பணத்தை எடுத்துவிட்டு மணிபர்ஸை பேருந்தில் போட்டுவிடுங்கள் என கூறிவிட்டு மீண்டும் பேருந்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, அரசு பேருந்து கிளம்பி சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.