ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதையும் படியுங்க: கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி விக்கெட் வரை களத்தில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுத்தந்தார்.இதன் மூலம்,அவரின் பெயர் உலகம் முழுவதும் பரவியது,மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் “யார் இந்த அசுதோஷ் சர்மா?” என்று ஆர்வத்துடன் தேடத் தொடங்கினர்.
அசுதோஷ் சர்மா,மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவருடைய தந்தை ராம் பாபு சர்மா,ஒரு அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த அசுதோஷ்,சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இதனால் அவர் முறையான பயிற்சி பெற மத்தியப் பிரதேச மாநில தலைநகரான இந்தூருக்கு குடிபெயர்ந்தார்.
இந்தூரில் உள்ள மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் அகாடமியில் அவர் சேர்ந்தார்,அதன் பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு மத்தியப் பிரதேச அணியில் இடம் பெற்றார்.2017-18 சோனல் T20 லீக் போட்டியில் முதல் முறையாக மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடினார்.பின்னர் 2019-20 விஜய் ஹசாரே டிராபியில் லிஸ்ட் A போட்டியில் அறிமுகமானார்.
ஆனால்,அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால்,அவர் ரயில்வே அணிக்கு மாறினார்.இந்த மாற்றம் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023 T20 போட்டியில்,அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து,யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
இவருடைய அதிரடி ஆட்டத்தால்,2024 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 20 லட்சத்திற்கு எடுத்தது.இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 3.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.இவரை அதிக விலை கொடுத்து வாங்கியதாக விமர்சிக்கப்பட்டாலும்,அதற்கு எல்லாம் தன்னுடைய மிரட்டலான பேட்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.