சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளதா..? என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு செல்லும் என நேற்று தீர்ப்பை அறிவித்தது. இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானப்படி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதை செல்லும் என தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது.
இதனிடையே, நெல்லை – களக்காடு அருகே வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சட்டசபையில் அதிமுகவின் உறுப்பினர் இருக்கையில் ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் :- நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும். ஆகவே, நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.