சென்னையில் கல்லூரிப் பேராசிரியர் வீட்டின் கழிவறையில் கவர் சுற்றியபடி உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: உத்தப் ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாத் குமார் கர்வார் (32) – அக்ஷனா பிரகாத் குமாரி தம்பதி. கர்வார், தனது மனைவியுடன் சென்னை அடுத்த மதுரவாயலில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கர்வாரின் மனைவி, அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், அருகில் வசிக்கும் சோனி என்பவருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீடு பூட்டிக் கிடந்ததால், ஜன்னல் வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துள்ளனர். அப்போது கர்வார், கழிவறையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வெளியான பிரேதப் பரிசோதனை முடிவில், அதிக உணர்ச்சிகளுக்காக முகத்தில் கவரைச் சுற்றியபடி சுய இன்பம் காணுவது போல், கர்வாரும் அதற்கு முயற்சி செய்து உள்ளார் என்பதும், இதனால் மூச்சுத் திணறி அவர் இறந்துள்ளார் என்றும் பிரேதப் பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: நாய்களுக்கு கூட உங்களை.. விமர்சித்தவர்களை விளாசிய திரிஷா!
ஆனால்,அவர் மாத்திரை அல்லது மருந்து வடிவில் வேறு ஏதேனும் உட்கொண்டாரா அல்லது வேறு யாராலும் கொலை செய்யப்பட்டு, கவர் சுற்றப்பட்டு இறந்து கிடந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.