தமிழகம்

’என் ஃபிரண்ட் இப்படித்தான் இருந்தான்.. ஆனா இப்போ ஓஹோ..’ 11 மாதங்களாக தேடிவந்த ஜோதிடர் கைது!

பெட்ரோல் பங்க் வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி 50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றிய ஜோதிடரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை: சென்னை வேளச்சேரி அடுத்த கருமாரியம்மன் நகர் விரிவு, பவானி தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – கவிதா தம்பதி. இவர்கள் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியைச் சேர்ந்த ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவர் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

அப்போது, ‘உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம்’ எனக் கூறி உள்ளார். இதனையடுத்து, என்ன தொழில் செய்தால் லாபம் வரும் என தம்பதி கேட்டுள்ளனர். இதற்கு, தனது நண்பர் ஒருவருக்கு 2020ஆம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்தேன்.

அவருக்கு தற்போது தொழில் நல்ல லாபமாக சென்று கொண்டிருக்கிறது, அவர்கள் வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர், உங்களிடம் காலியிடம் இருந்தால் நீங்களும் பெட்ரோல் பங்க் தொடங்கலாம், மேலும் அதற்கான உரிமத்தையும் நானே வாங்கித் தருகிறேன் என ஜோதிடர் கூறி உள்ளார்.

அப்போது, தங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் வேட்டவலம் பகுதியில் 65 சென்ட் இடம் இருப்பதாக கூறி உள்ளனர். இதனையடுத்து, திருமுடிவாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் என்பவர் வீட்டிற்கு ஜோதிடர் தம்பதியை அழைத்துச் சென்று உள்ளார். அப்போது இவருடைய தந்தை, டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணிபுரிகிறார் எனவும், அதனால் அவருக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, 85 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்களுக்கும் பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கித் தருவார் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய தம்பதி, அவர்களது கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் முன்பணமாக 50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்… விசாரணையில் திக்.. திக்..!!

ஆனால், பணம் கொடுத்து இரண்டு வருடங்கள் கடந்தும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுத் தராமல் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் முறையான பதில் அளிக்காமல் இருந்து உள்ளனர். மேலும், நேரில் சென்று கேட்டால் அடியாட்களை வைத்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனால், ஜோதிடர் வெங்கட சுரேஷ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடப்பாண்டு ஜனவரியில் வேளச்சேரி காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்து உள்ளார். ஆனால், இது குறித்து அறிந்த இருவரும் தலைமறைவாகி உள்ளனர். பின்னர் தனிப்படை கடந்த 11 மாதமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஜோதிடர் வெங்கட சுரஷை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

24 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.