கோவை விமான நிலைய நுழைவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மத்திய அமைச்சர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்.
அவரை வரவேற்க வந்திருந்த துறை அதிகாரிகள், அமைச்சர் முருகன் வர காலதாமதம் ஆகும் என நினைத்து விமான நிலையத்திற்குள் எல்.முருகனின் நுழைவு அனுமதி சீட்டுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் சீக்கிரமே கோவை விமான நிலையம் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது, நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சில நிமிடங்களில் அதிகாரிகள் நுழைவு அனுமதி சீட்டுடன் வந்த நிலையில் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே மத்திய அமைச்சர் முருகன் தன்னுடன் வந்தவர்களை கடுமையாக சாடினார்.
இதற்கு முன்னரும் இதே போல் நடந்துள்ளது எனவும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.