கோவை விமான நிலைய நுழைவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மத்திய அமைச்சர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தார்.
அவரை வரவேற்க வந்திருந்த துறை அதிகாரிகள், அமைச்சர் முருகன் வர காலதாமதம் ஆகும் என நினைத்து விமான நிலையத்திற்குள் எல்.முருகனின் நுழைவு அனுமதி சீட்டுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் சீக்கிரமே கோவை விமான நிலையம் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது, நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சில நிமிடங்களில் அதிகாரிகள் நுழைவு அனுமதி சீட்டுடன் வந்த நிலையில் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே மத்திய அமைச்சர் முருகன் தன்னுடன் வந்தவர்களை கடுமையாக சாடினார்.
இதற்கு முன்னரும் இதே போல் நடந்துள்ளது எனவும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடம் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.