ஜவான் படத்தின் புதிய அப்டேட்.. இது விஜய்யின் அந்த படத்தின் ரீமேக்கா இருக்குமோ.?

தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

ஏன் தெரியுமா, அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அந்த வகையில் ஷாருக்கானின் ஜவானில் எந்த மாதிரியான கதையம்சத்தை அட்லீ வைத்திருப்பார் என்றும் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பாவாக வரும் ஷாருக் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல மகனாக வரும் ஷாருக்கானுக்குதான் நயன்தாரா ஜோடியாக நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜவான் படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில், படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தை இறக்கவைக்கும் காட்சிகள் அட்லீயின் கதையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். அதன்படி ராஜா ராணியில் நஸ்ரியா, தெறியில் சமந்தா, ராதிகா, மெர்சலில் அப்பா விஜய், நித்யா மேனன் மற்றும் பிகிலில் ராயப்பனாக வந்த விஜய் ஆகிய கேரக்டர்கள் கொல்லப்பட்டிருக்கும். இதேபோல ஜவானிலும் அப்பா கேரக்டரில் வரும் ஷாருக் அல்லது தீபிகா படுகோன் இருவரில் யார் இறப்பார்கள் என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் தற்போது வெளியான தகவலை வைத்து, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தின் சாயல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் இருப்பது போல உள்ளது என பதிவிட்டு வருகிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.