புதுச்சேரி : புதுச்சேரியில் பத்திரிக்கையாளரை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
புதுச்சேரி முருகம்பாக்கம் ரங்கசாமி நகர் பத்திரிக்கையாளர் காலனியை சேர்ந்தவர் உதயநாராயணன் (56) நமது முரசு நாளிதழின் நிறுவனர், இவர் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சட்டசபையில் இருந்து வீட்டிற்கு என்.ஆர்.நகர் வழியாக சென்று கொண்டிருந்த போது அவரை தொடர்ந்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உதயநாராயணனின் வாகனத்தின் மீது மோதி அவரை கையால் தாக்கி, காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் உதயநாராயணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் தேங்காய்தி்ட்டை சேர்ந்த சதீஷ் (எ) சௌந்தரராஜன், கார்த்தி என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரோடியர்பேட்டை சேர்ந்த அம்மா ஆறுமுகம் மற்றும் அவரது மைத்துனரும் பிரபல ரவுடியுமான அந்தோணி ஆகியோர் கூறியதன் பேரில் உதய நாராயணனை தாக்கியதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அம்மா ஆறுமுகத்தை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை உதயநாராயணன் நடத்தினார்.
உதயநாராயணனுக்கும், ஆறுமுகத்தின் அண்ணன் மதிமகராஜாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதிமகராஜா, ஆறுமுகம் ஆகியோர் மீது பெரியக்கடை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தனது மச்சான் அந்தோனியிடம் கூறியதாகவும், அவர் சதீஷ், கார்த்தியை விட்டு உதய நாராயனனை தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகத்தின் மைத்துனர் அந்தோனியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
This website uses cookies.