கோவை தொண்டாமுத்தூர் வளையக்குட்டை எஸ்.எல்.வி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் கீழ் தளத்தில் வீடும், மேல் தளத்தில் தங்க பட்டறை அமைத்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மேல் தளத்தில் இருந்து பொருட்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சண்முகம் உள்ளே பார்த்த போது வட மாநில இளைஞர் ஒருவர் உள்ளே நின்றுள்ளார். இதை கண்ட சண்முகம் உடனடியாக கதவை வெளியே பூட்டியுள்ளார். பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீஸார் உள்ளே வட மாநில இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது மது போதையில் பதில் பேசாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த ஹபிபூர் ரகுமான் மகன் பரூக் அகமது (வயது 20) என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன் கோவை வந்த பரூக் அகமது, வேலை தேடி அலைந்ததாகவும், இந்நிலையில் தொண்டாமுத்தூர் சண்முகம் வீட்டை இரண்டு நாட்களாக பார்த்ததாகவும் உள்ளே தங்க நகைகள் இருக்கும் என எண்ணி, சுற்றுசுவரை ஏறி மேல் மாடிக்குச் சென்று தங்கத்தை திருட முயன்ற போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.