கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்து உள்ள வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்தீன் பீபி (90). இவர் உடல நலக்குறைவால் தனது வீட்டில் இன்று இறந்து உள்ளார்.
இவரது உறவினர்கள் காளிபாளையத்தில் மயானம் என்று கூறப்படும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டி உள்ளனர். அந்த மயானம் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடம் என்றும், இந்த இடத்தில் உடலை புதைக்க கூடாது என்றும் அரசு வருவாய் துறையினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள், தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குழியை மூட வேண்டும் என்று கூறினர்.
இதையும் படியுங்க: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? மிரட்டி விட்ட புஷ்பா 2.!!
மேலும் இந்த இடத்தை நடைபாதையாக உபயோகித்து கொள்ள முடியுமே தவிர இறந்தவர்கள் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் இந்த இடத்தில் தான் பல வருடங்களாக இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த அன்னூர் தாசில்தார், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் இஸ்லாமிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அங்கு இந்து முன்னணியை சேர்ந்தவர்களும் திரண்டதால் பதட்டம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.