சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் இவர் அப்பகுதியில் ஏ வி எஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு 8 45 மணியளவில் இருவர் நகை வாங்குவதற்கு போல் வந்துள்ளனர். அப்போது அங்குள்ள நகைகளை காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் கையில் வைத்திருந்த ஆசிப் பாட்டிலை நகைக்கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அவரது மனைவி செல்வ லட்சுமி கடையில் பணிபுரிந்த வசந்தி ஆகியோர் மீது ஊற்றியுள்ளார்.
தொடர்ந்து டிராவில் இருந்த 80 சவரன் நகையும் கொள்ளையடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அந்த நகைகளை பிடுங்கி போது ஆசிட் ஊற்றியும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்கள் ஓட முயற்சித்தனர். அதில் ஒருவரை கடை உரிமையாளர் மடக்கிப்பிடித்தார்.
மற்றொரு நபர் கடைவீதி வழியாக தப்பி ஓடும்போது அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர்.
அந்த நபரிடம் ரிவால்வால் எனும் துப்பாக்கி இருந்ததால் அந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களிடம் மிரட்டியுள்ளார் தொடர்ந்து பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட இருவரையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒருவர் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் என்பதும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது
ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள நகைக்கடையில் துணிகர கொள்ளை சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.