மயிலாடுதுறை மூவலூர் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 20). மறையூரை சேர்ந்த சுரேஷ் மேஸ்திரி என்பவரிடம் சித்தாள் வேலைக்கு சென்று வந்ததுள்ளார்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மறுநாள் காலை அவர் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த சம்பவத்தில் கபிலன் என்பவரும், 17 வயது சிறுவன் ஒருவரும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கபிலனுக்கும் பள்ளி மாணவருக்கும் இடையே நெடுநாட்களாக ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்தாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரையும் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி அன்று இரவு ஏற்கனவே மது போதையில் இருந்த ராஜ்குமாரை மஞ்சளாறு பாலத்தின் தண்டவாளத்திற்கு அழைத்து சென்று, மேலும் மதுவை ஊற்றி கொடுத்து, அதிக போதைக்குள்ளாக்கியுள்ளனர்.
அப்போது ராஜ்குமாரின் ஆடைகளை கழற்றிவிட்டு நிர்வாணமாக்கி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்கு இருவரும் ராஜ்குமாரை கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு ராஜ்குமார் ஒத்துக் கொள்ளாததால் கபிலன் பீர் பாட்டிலால் ராஜ்குமார் தலையில் அடித்துள்ளார். ராஜ்குமார் தப்பியோட முயன்றபோது தங்களின் ஓரினச் சேர்க்கை விபரம் வெளி உலகிற்கு தெரிந்துவிடுமோ என்று பயந்துள்ளனர்.
ராஜ்குமாரை ரயில் தண்டவாளத்தில் தள்ளி உடைந்த பீர் பாட்டிலால் தலையில் குத்தியும், கருங்கல்லால் தலையில் தாக்கியும் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுவிட்டு ரயிலில் அடிபட்டு இறந்ததாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.