கோவை : பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் முகமத்ஹூசைன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சவாரிக்காக கோவை வந்தார். அப்போது திருச்சி ரோடு குளத்தேரி அருகே சென்ற போது திருநங்கைகள் சிலர் ஆட்டோவை மறித்தனர்.
ஆட்டோவை நிறுத்திய முகமத் ஹூசைனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் முகமத் ஹூசைனின் செல்போனை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், முகமத் ஹூசைனிடம் செல்போன் பறித்தது திருநங்கைகள் பிரீத்தா, மவுமிகா மற்றும் ஒருவர் என தெரியவந்தது. போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.