சென்னை: திருச்சி-சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி ஆட்டோ ரேஸ் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களின் உயிருடன் விளையாடும் சட்டவிரோத பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் நடத்தும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை – திருச்சி இடையிலான சென்னை பை – பாஸ் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இச்சாலையில், கனரக, சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றன. இதற்கு இணையாக, ‘டூ விலர்’களும் இச்சாலையில் அதிகளவில் பயணிப்பதால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காவல் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டோ ரேஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 3க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில சுமார் 10 க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத ஆட்டோ ரேசில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.