திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை சார்பில் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, நலவாழ்வு, பாலின சமத்துவம், பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதிய அழகிய விதவிதமான கோலங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மகளிர் தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு கோலங்களுக்கும் சிறந்த கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.