உலக புற்றுநோய் தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

Author: Rajesh
4 February 2022, 11:56 am
Quick Share

கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செவிலியர் மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 818

0

0