Categories: தமிழகம்

வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாகண்ணு.. அமித்ஷா போட்ட உத்தரவா? கொந்தளிக்கும் விவசாயிகள்!

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முழுவதும் விவசாயிகள் இன்று அந்தந்த மாநிலத்தில் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுக்க உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருந்த நிலையில், திருச்சி மாநகர காவல்துறையினர் செல்ல விடாமல் வீட்டு காவலில் வைத்துள்ளனர். செய்தியாளர்களை சந்திக்க அய்யாகண்ணு வெளியே வந்த போது
காவல்துறையினர் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அய்யாகண்ணு, எல்லா மாநிலத்தில் உள்ள மாவட்டத்திலும் பிரதமர் மோடி தெரிவித்தபடி வேளாண் விளைபொருட்களுக்கு இருமடங்கு லாபம் தரும் விலை வழங்க வேண்டும், எம்.எஸ்.சாமிநாதன் சொன்ன சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட விதை இறக்குமதி செய்யக்கூடாது. விவசாயி வாங்கிய அனைத்து கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு அளித்து வருகின்றனர்.

ஆனால் திருச்சியில் மட்டும் காவல்துறையினர் வெளியே விடாதபடி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்றால் ரயில்களில் மறிக்கின்றனர். இது அரசியல் சட்டத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது. இது மனித உரிமை மீறலாகும்.
இது என்ன ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா.

நாங்கள் போராட்டத்தின் போது பஸ்ஸை மறிக்கிறோமா அல்லது ஏதாவது சேதப்படுத்துகிறோமா. நாங்கள் இப்போது கேட்க விரும்புவது மத்திய அரசை தான். உச்ச நீதிமன்றம் மாதம் தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

ஆனால், தற்போது தண்ணீர் நிரம்பிய உடன் கர்நாடகா நீரை திறந்து விடுகிறது. தமிழகத்தை வெள்ளம் வடியும் மாநிலமாகத்தான் பார்க்கிறார்கள். தற்போது குருவை சாகுபடி முடிந்து விட்டது.

சம்பா சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதமாகும். இப்போது விடப்படும் தண்ணீர் கடலில் தான் செல்ல போகிறது. இந்த தண்ணீரை திருப்பி அய்யாரில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதையும் செய்வதில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி டெல்லியில் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களை தடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உட்பட பல்வேறு மாநிலங்களில் நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம். டெல்லியிலும் இதற்கான உத்தரவை பெற்றுள்ளோம்.

வீட்டு காவல் வைத்ததற்கான காரணத்தை குறித்து காவல்துறையிடம் கேட்டபோது
டெல்லியில் அமித்ஷாவிடம் இருந்து விடக்கூடாது என்று உத்தரவு வருகிறது என கூறுகின்றனர். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

6 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

7 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

7 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

7 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

8 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

9 hours ago

This website uses cookies.