திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை கட்டைப் பையில் கொடுத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மாரடபள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், ரம்யா கர்ப்பம் ஆகி உள்ளார்.
பின்னர், நிறைமாத கர்ப்பிணியான ரம்யா, பிரசவத்திற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், குழந்தைக்கு உடல் நலக் குறைவு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறி உள்ளனர்.
இதனையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து உள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இதயம் மற்றும் மூளையில் பாதிப்பு இருப்பதாகக் கூறி உள்ளனர். இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறி உள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ, குழந்தையை கட்டப்பையில் கொடுத்து உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அவர்கள், மருத்துவமனை வாசலிலேயே சாபமிட்டு வந்து உள்ளனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சரை பார்க்க நிர்வாணமாக சென்ற பெண் அகோரி.. திகைத்து நின்ற தொண்டர்கள்!
இது அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்து உள்ளது. சமீப காலமாக, பிரசவ நேரத்தின் போது அரசு மருத்துவமனைகளில் தாய் – சேய் இறப்பு ஏற்படும் செய்திகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்துடனே அரசு மருத்துவமனையை அணுகுகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.