கர்நாடகாவில், காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின் அடுத்த ஷெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் ஆனந்த் – சுபா தம்பதியர். இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், குழந்தைக்கு காது குத்தும்போது, வலி தெரியாமல் இருப்பதற்காக, பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு இருந்த மருத்துவர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும், மயக்க மருந்து ஊசி போட்டுள்ளார்.
இதற்காக அவர் 200 ரூபாய் கட்டணமும் பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு ஊசி போட்ட நிலையில், அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், குழந்தையின் வாயில் நுரை வந்துள்ளது. எனவே, உடனடியாக தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை இரட்டைக் கொலை.. 4 வருடங்கள் கழித்து டெல்லியில் சிக்கிய டைல்ஸ் தொழிலாளி!
ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொம்மலாபுரா அரசு ஆரம்ப சுகாதார மையத்திலேயே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், இது தொடர்பாக ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.