திண்டுக்கல் : நத்தம் வனத்துறை அலுவலகத்தில் பெண் வனக்காப்பாளருக்கு சக வனத்துறை பணியாளர்கள் வளைகாப்பு நடத்தி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரகம் கோட்டையூர் வனப்பகுதியில் விஜயலட்சுமி(31) வனக்காப்பாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் ராம்நாடு அருகே சாயல்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இவருக்கு சத்தியேந்திரன் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதனை அறிந்த நத்தம் வனசரக அலுவலர் பாஸ்கரன் மற்றும் வனப் பணியாளர்கள் அந்த (விஜயலட்சுமிக்கு) பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனா்.
அதன்படி வனச்சரக அலுவலர் பாஸ்கரன், வனவர்கள் சம்பந்தமூர்த்தி, முத்துசாமி ஆகியோா் முன்னிலையில் வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், பெண் வனக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் ஏழு விதமான உணவு, பிரியாணி வகைகளுடன் சேலை, பழங்கள், வளையல் உள்ளிட்ட பொருள்களை சீா்வரிசையாக வைத்து வனத்துறையினர் சிறப்பாக நடத்தினா். சக வனத்துறை பெண் வனக்காப்பாளருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. சக பெண் வனபணியாளர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.