விழுப்புரம் : வீடூர் அணை மீது போடப்பட்ட தரமற்ற சாலையை கையால் பெயர்த்து எடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையில் தூர்வாரி கரையை பலப்படுத்த 43 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது அணையில் மேலே சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த சாலை தரமற்றதாக போடப்படுவதாக ஆத்திகுப்பம் பகுதி கிராம மக்கள் போடப்பட்ட சாலையை கையால் அடை போல் பிரித்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனால் வீடூர் அணையை சுற்றியுள்ள கிராம மக்கள் அந்தந்த பகுதியில் போடப்பட்ட சாலையை இதே போல கையால் இழுத்துப் பார்த்தபோது தரமற்ற சாலையை போட்டுள்ளதாக கோபமடைந்த கிராம மக்கள் வேறொரு இடத்தில் இதே போல சாலையை போட்டுக் கொண்டிருந்த பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அணையின் பொறியாளர் மற்றும் பணி ஒப்பந்ததாரர் நேரில் வந்து போராட்டத்தை கைவிடுமாறும் மீண்டும் அந்தப் பகுதியில் தரம் உள்ள சாலையை போடுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.
43 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கி எந்த பணியும் செய்யப்படவில்லை பெயர் அளவிற்கு அணையை தூர் வாரியதாகவும் அணையின் சுற்றுச்சுவர்களில் சுண்ணாம்பு அடித்து இதுபோல தரமற்ற சாலைகளை அமைத்து மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி 43 கோடி ரூபாய்க்கு எந்தெந்த வேலைகளை செய்தார்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
This website uses cookies.