திருப்பூர் அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருந்து வருகின்றனர்.
இதில் முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும் படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என மூன்று பேரும் உடல் உப்பிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.
மேலும் படிக்க: நான் நினைத்தால் வருவேன், போவேன் : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
உயிரிழந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் துர்நாற்றம் வீசிய நிலையில் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாக சுரேஷ் (35) அவரது மனைவி விஜி( 29) இவர் அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கடன் பிரச்சனையா அல்லது குடும்பப் பிரச்சனையில் ஏதேனும் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அணைக்காடு பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிவந்து ஒரு வருடங்களே ஆன நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.