Categories: தமிழகம்

வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர் தனது மனைவி சுருதி, 10 வயது மகள் யக்சிதா ,தாய் பிரேமா ஆகியோருடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று காலை அவரது மாமனாரான பாலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக பேசியுள்ளார்.தொடர்ந்து அவரது மாமனார் பாலன் அன்று இரவு ராஜேஷுக்கும் மகள் சுருதிக்கும் செல்போனில் தொடர்பு கொண்ட போது இருவரும் பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையும் அவர் செல்போனில் அழைத்தும் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளரான ஷீலா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். இதை அடுத்து இன்று மாலை ஷீலா, ராஜேஷின் வீட்டின் கதவை தட்டிய பொழுது அங்கிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்துள்ளார்.
இதனால் பாலனுக்கு தகவல் அளித்த ஷீலா வடவள்ளி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் உள்புறமாக தாழிட்ட கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியபடி ராஜேஷ் கிடந்துள்ளார்.

மேலும் அங்கிருந்த கட்டிலில் மனைவி சுருதி, தாய் பிரேமா மற்றும் மகள் யக்சிதா ஆகியோரும் உடல் அழுகி நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ் பல இடங்களில் கடன் பெற்று தற்போது கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததும் கடந்த வியாழக்கிழமை இரவு டோமினோஸ் உணவகத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இரவு உணவு வாங்கியதும் தெரியவந்துள்ளது.

வியாழக்கிழமை இரவு டோமினோஸ் நிறுவன ஊழியர் இரவு உணவை வழங்கிய போது கடைசியாக ராஜேஷ் பார்த்ததாகவும் அதற்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே ராஜேஷ் தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்தும் அவருக்கு கடன் வழங்கி தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்பட்டது யார் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

11 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

12 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

13 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

14 hours ago

This website uses cookies.