கடைவீதியில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி : புகை பிடித்தவரால் ஏற்பட்ட விபத்து.. பதைக்க வைக்கும் பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 9:34 am
Balloon Gas Accident - Updatenews360
Quick Share

திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் பலூன் காஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலியான நிலையில் அருகில் புகைபிடித்தவரால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் போத்தீஸ், சென்னை சில்க்ஸ், உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. விடுமுறை என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமும், மேலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் போத்தீஸ் துணிக்கடை எதிரில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அங்கிருந்த பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு நாலு பக்கமும் சிதறி ஓடினர். அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.

தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரியின் பலூனுக்கு நிரப்பப்பட்ட ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது.

இதில் சம்பவ இடத்தில் பலூன் வியாபாரி படுகாயம் அடைந்து பலியானார். காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முதற் கட்ட விசாரணையில் பலியான நபர் கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம், கரட்டான் காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரவிக்குமார் என்ற மாட்டு ரவி (35) என காவல்துறையை சந்தேகிக்கின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது காவல்துறை தெரிவிக்கின்றனர்.

மேலும், கேஸ் பலூன் விற்ற நபர் தப்பி ஓடிவிட்டார். வரகனேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மன்சூர் என்பவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்றுள்ளார். இதனால் ஆட்டோ மட்டும் சேதம் அடைந்தது.

கேஸ் சிலிண்டர் வெடித்த இடத்தில் நின்று இருந்த 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களுக்கு காயமடைந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய பலூன் விற்ற நபரை காவல்துறையினை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 465

0

0