தமிழகம்

வங்கி ஊழியர் மகனை தாக்கிவிட்டு கொள்ளை… ரூ.4.20 லட்சம் அபேஸ்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதிர்ச்சி!

திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள கள்ளத்தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். வங்கியில் அப்ரைசராக பணியாற்றி வரும் இவர் காலையில் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதையும் படியுங்க: ஊழல் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் போட்ட போடு : துரைமுருகன் ஆவேசம்!

எப்பொழுதும் இரும்பு கதவை பூட்டிவிட்டு சாவியை உள்ளே இருக்கும் மரக் கதவில் உள்ள ஆணியில் சாவியை மாட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இதனை பல நாட்களாக நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் இன்று துரைராஜின் மனைவி கோவிலுக்கு செல்வதை கண்காணித்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு வீட்டினை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது முதல் மாடியில் இருந்த துரைராஜ் மகன் வசந்த் எதேர்ச்சியாக கீழே வந்துள்ளார் அப்போது இரண்டு பேர் வீட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் சத்தம் போட்டு உள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த திருடர்கள் சுமார் நான்கரை லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

மிகவும் குறுகிய சந்து என்பதால் வசந்தின் கையில் பிளேடால் கிழித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். அப்போது கையில் இந்த நகைகளை வசந்த் பிடுங்கி உள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல்துறையினர் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சுமார் 4.20 லட்சம் ரொக்க பணத்துடன் தப்பிச்சென்ற இரண்டு இளைஞர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாநகர மையப்பகுதியில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

யாருக்குமே கை கொடுக்க மாட்டேன்- சர்ச்சை வீடியோவுக்கு கறாராக பதில் சொல்லும் நித்யா மேனன்!

சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…

1 day ago

இபிஎஸ், அண்ணாமலை குறித்து ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா… அதிர்ச்சி வீடியோவால் அரசியலில் பரபரப்பு!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…

1 day ago

என் படத்தை பார்த்துட்டு அந்த இயக்குனர் ஓங்கி அடிச்சாரு- சேரன் சொன்ன தரமான சம்பவம்!

தவமாய் தவமிருந்து  சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…

1 day ago

திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

1 day ago

விஷால் வீட்டுல அனுமதி எதுக்கு கேட்கணும்.. நான் இப்படித்தான் : சாய் தன்ஷிகா ஓபன் டாக்!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…

1 day ago

பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…

1 day ago

This website uses cookies.