பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது. இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஆர்டிகிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும் படத்தில் சிறு சிறு கதைக்களத்தை மாற்றி எடுத்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை பிரிவை சேர்ந்த தலைமை காவலர் கதிரவன் என்பர் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானதை முன்னிட்டு, முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக படத்துடன் கூடிய பேனரை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காவலர்களுக்கு வார ஓய்வு, மகப்பேறு விடுப்பு 1 வருடம், காவல் ஆணையம் அமைத்தது, காவலர் குடியிருப்பு சென்று ஆய்வு மற்றும் குறைகளை கேட்டறிந்தது, எஸ்.ஐ.,களுக்கு மாதத்தில் 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டது போன்ற காவலர் நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு சிறப்பாக முன்னெடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பேனரை வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.