வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிவு எட்டப்படாததால் வைக்கப்பட்டுள்ள பேனர் பேசுபொருள் ஆகியுள்ளது.
புதுக்கோட்டை: “3-ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு புலன் விசாரணையில், அசையா ஆமை, நகரா நத்தை அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் CBCID, இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்ட வேங்கை வயல் ஊர் பொதுமக்கள்” என வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்த வரிகள் இடம் பெற்றுள்ளது.
இது தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் கூறுவதாக, ” வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதனை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26 அன்று, வேங்கை வயல் கிராமத்தில் பேனர் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, பேனர் வைக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பேனரை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர். உள்ளூரில் விசாரித்த வரையில், எதிர்கட்சியினர் தூண்டுதலில் தான் யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும். மேலும், தீவிர விசாரணை நடக்கிறது” பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் இதனை விசாரித்தது.
இதையும் படிங்க: இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!
இதன்படி, 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், 5 சிறுவர்கள் உள்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உள்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால், இரண்டு வருடங்களைக் கடந்தும் இதில் முடிவு எட்டப்படவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.