தமிழகம்

3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?

வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிவு எட்டப்படாததால் வைக்கப்பட்டுள்ள பேனர் பேசுபொருள் ஆகியுள்ளது.

புதுக்கோட்டை: “3-ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு புலன் விசாரணையில், அசையா ஆமை, நகரா நத்தை அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் CBCID, இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்ட வேங்கை வயல் ஊர் பொதுமக்கள்” என வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்த வரிகள் இடம் பெற்றுள்ளது.

இது தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் கூறுவதாக, ” வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதனை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26 அன்று, வேங்கை வயல் கிராமத்தில் பேனர் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, பேனர் வைக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பேனரை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர். உள்ளூரில் விசாரித்த வரையில், எதிர்கட்சியினர் தூண்டுதலில் தான் யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும். மேலும், தீவிர விசாரணை நடக்கிறது” பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் இதனை விசாரித்தது.

இதையும் படிங்க: இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

இதன்படி, 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், 5 சிறுவர்கள் உள்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உள்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால், இரண்டு வருடங்களைக் கடந்தும் இதில் முடிவு எட்டப்படவில்லை.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.