தமிழகம்

3ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா.. பரபரப்புக்கு உள்ளான பேனர்.. போலீஸ் கூறுவது என்ன?

வேங்கை வயல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிவு எட்டப்படாததால் வைக்கப்பட்டுள்ள பேனர் பேசுபொருள் ஆகியுள்ளது.

புதுக்கோட்டை: “3-ஆம் ஆண்டு தூ(ங்கும்)வக்க விழா, வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு புலன் விசாரணையில், அசையா ஆமை, நகரா நத்தை அத்தனையும் சொத்தை என்று எங்களால் போற்றப்படும் CBCID, இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை செய்ய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்ட வேங்கை வயல் ஊர் பொதுமக்கள்” என வேங்கை வயல் ஊர் பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள பேனரில் இந்த வரிகள் இடம் பெற்றுள்ளது.

இது தற்போது பேசு பொருளாகி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் கூறுவதாக, ” வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதனை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26 அன்று, வேங்கை வயல் கிராமத்தில் பேனர் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, பேனர் வைக்கப்படவில்லை. இருப்பினும், அந்த பேனரை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர். உள்ளூரில் விசாரித்த வரையில், எதிர்கட்சியினர் தூண்டுதலில் தான் யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும். மேலும், தீவிர விசாரணை நடக்கிறது” பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி எனத் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் இதனை விசாரித்தது.

இதையும் படிங்க: இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

இதன்படி, 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார், 5 சிறுவர்கள் உள்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். அதில், ஒரு காவலர் உள்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால், இரண்டு வருடங்களைக் கடந்தும் இதில் முடிவு எட்டப்படவில்லை.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

15 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

17 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

36 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.