தருமபுரி அருகே உள்ள கௌாப்பாறையை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ் என்ற பெயரில் சலூன் கடை ஒன்று உள்ளது. இங்கு கடந்த 9ம் தேதி மாலை கௌாப்பாறையை சேர்ந்த ஓட்டுநர் இளங்கோ என்பவரது மகன் சஞ்சய் என்ற இளைஞர் முடிவெட்ட சென்றுள்ளார். அப்போது யோகேஷ் என்பவர் நீ எந்த ஊர் என கேட்டதற்கு, நான் கௌாப்பாறை காலனி பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அரசுப் பணிக்கு போலி நியமன ஆணை… ரூ.77 லட்சம் சுருட்டிய சர்வேயர் கைது ; 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!!
பட்டியலினத்தை சேர்ந்தவர் என தெரிந்தவுடன், ‘உங்களுக்கு முடிவெட்ட முடியாது’ என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏன் என்று கேட்டதற்கு ‘காலனி பசங்களுக்கு முடிவெட்ட முடியாது’ என கூறினாராம். இதையடுத்து. சஞ்சய் இது குறித்து தனது ஊரில் உள்ள இளைஞர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து கேட்ட இளைஞர்கள், யோகேஷ் கடைக்கு சென்று முறையிட்டுள்ளனர்.
அப்போது அவரது தந்தை கருப்பன் மற்றும் மகன் யோகேஷ் ஆகிய இருவரும் பறையர்களுக்கு முடிவெட்டமுடியாது என சாதி பெயரை உச்சரித்து, இது காலம் காலமாக உள்ள வழக்கம் என கூறியுள்ளார். இச்சம்போதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வரும் நிலையில், இன்று இது குறித்து பாதிக்கப்பட்டவர் அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் அரூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாதிய பிரச்சனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த விவகாரம், அதே போல் மாட்டு இறைச்சியை அரசு பேருந்தில் எடுத்துச் சென்றதால் மூதாட்டி ஒருவரை பாதி வழியில் காட்டுப்பகுதியில் இறக்கிச் சென்ற விவகாரம், தற்போது முடி திருத்தம் செய்வதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது, என தொடர்ந்து சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.