வத்தலகுண்டு பேரூராட்சி சார்பில் பொங்கல் விழா உறியடி நிகழ்ச்சியில் தலைவரின் மண்டையைக் குறி வைத்த துணைத்தலைவரால் கலகலப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் இணைந்து பங்கேற்ற சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரூராட்சி சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் உரியடிக்கும் போட்டியில் துணைத் தலைவர் தர்மலிங்கம் கண்ணைக் கொட்டிக்கொண்டு உரியடிக்கும் களத்தில் இறங்கினார்.
ஆரவாரத்துடன் இலக்கை அடைந்த துணைத் தலைவர் நேராக பானை இருக்கும் பக்கம் செல்லாமல், சினிமா பட பாணியில் எதிரே நின்றிருந்த பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் நோக்கி சென்று, பானை இலக்கு வந்துவிட்டது என நினைத்து ஓங்கி அடிக்க தலைவர் ஒதுங்கிக் கொண்டார்.
அப்போது, அங்கு கூடி இருந்தவர்கள் சந்தடி சாக்கில் தலைவர் மண்டையை துணைத்தலைவர் உடைக்க பார்த்தார் என கூறியதால் அங்கு சிரிப்புடன் கூடிய ஆரவாரம் நிலவியது. கடைசியாக தலைவர், “ஏது என்றாலும் பேசி தீர்த்துக்கலாம். அதற்காக மண்டையை உடைக்கலாமா..?’ என கேட்டதால் அந்த இடத்தில் சிரிப்பொலி ஆனது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.