பீஸ்ட் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 படங்கள் கடந்த தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியாகின. அடுத்தடுத்த தினங்களில் வெளியான இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வித்தியாசப்பட்டுள்ளன. தற்போது இரு படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளன. மேலும் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் பீஸ்ட் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் இந்த படம் ரூபாய் 200 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் 50 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது.
இதேபோல யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் சாப்டர் 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து, இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படம் சில நாட்களிலேயே சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தொடர்ந்து இந்தப் படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் படம் 120 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை செய்துள்ளது. கேஜிஎப் 2 தமிழகத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் விமர்சனங்களிலும் வசூலிலும் இந்தப் படங்களுக்கிடையில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.