பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நஹீம் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மேலும், பெங்களூரில் அல்கொய்தா வழக்கில் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஐந்து வருடங்கள் சிறைக்கு அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதி வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி புரிந்து வந்தனர்.
மேலும் படிக்க: மக்களின் உயிரோடு விளையாடாதீங்க… போக்குவரத்துத் துறையையே காவு வாங்கும் CM ஸ்டாலின் ; இபிஎஸ் கொந்தளிப்பு
இந்த நிலையில், இவர்களுக்கு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா..? என என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.