பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நஹீம் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மேலும், பெங்களூரில் அல்கொய்தா வழக்கில் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஐந்து வருடங்கள் சிறைக்கு அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதி வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி புரிந்து வந்தனர்.
மேலும் படிக்க: மக்களின் உயிரோடு விளையாடாதீங்க… போக்குவரத்துத் துறையையே காவு வாங்கும் CM ஸ்டாலின் ; இபிஎஸ் கொந்தளிப்பு
இந்த நிலையில், இவர்களுக்கு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா..? என என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.