கோவை : யாசகம் கேட்பது போல் நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
கோவை பீளமேடு அடுத்து ஜி.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் மரியா பிரதீப்(46). இவரது மகன் கொடிசீயா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி பள்ளியில் தனது மனைவியுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இருவரும் பள்ளியின் முன் காரில் காத்திருந்த போது, அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் மரியா பிரதீப்-இடன் யாசகம் கேட்டுள்ளார்.
தனது கார் கண்ணாடியை திறந்த மரியா பிரதீப் தனது பர்சிலிருந்து பத்து ரூபாய் யாசகம் கொடுத்த நிலையில், அதனை பெற்றுகொண்ட திருநங்கை அங்கிருந்து நகர்ந்து தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து தனது பர்ஸை பார்க்கும் போது அதில் இருந்த எட்டாயிரம் ரூபாய் மாயமாகி இருந்துள்ளது. இது தொடர்பாக மரியா பிரதீப் பீளமேடு போலீசில் புகார் அளித்தன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளன்வாஞ்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மரியா பிரதீப்-ன் தங்கை இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவளைதளங்களில் பதிவிட்டுள்ளது கோவையில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.