செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.
இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.
இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.
தற்போது பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒட்டுமொத்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் தற்போது இதில் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்தது முதல் இவர் மீது ரசிகர்களுக்கு கோபம் தான் வருகிறது. அதுவும் bigg boss ultimate நிகழ்ச்சியில் எந்த காட்சியையும் கட்டிங்கோ எடிட்டிங்கோ செய்யாமல் அப்படியே ஒளிபரப்பட்டு வருகிறது.
24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம். அதே போல விஜய்டிவியில் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான அபிநய், பாலா, அபிராமி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிகரெட் புகைப்பது போன்ற வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அதை விட அனிதா சம்பத் பேசிய அநாகரீகமான வார்த்தைகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் போட்டியாளர் நிரூப், இந்த பாட்டிலை கொண்டு போய் உள்ளே வை என கூறுகிறார். அதற்கு அனிதா சூ….ல வைப்பாங்க, நா எநத் ம…றுக்கு அந்த பாட்டில வைக்கணும், அது யாரு பாட்டிலோ அவங்கள வைக்க சொல்லு, வந்துரும் வாயில என மிக கேவலமான வார்த்தைகளில் பேசினார்.
தற்போது மீண்டும் அனிதா ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். கால தூக்கி வச்சி எப்படி அக்கா தூங்க முடியும் என்று அனிதா கேட்க, அதற்கு தாமரை வேற எப்படி நெனச்ச என்று டபுள் மீனிங்கில் கேட்க, அது நீட்டிட்டு இருக்கோனு நெனச்ச என சொல்லி சிரித்தார் அனிதா.
மேலும், ஐய்யயோ நான் பேசினது மைக்ல கேட்டு இருப்பாங்களே என்று கூறியுள்ளார் அனிதா. இப்படி தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி வரும் அனிதாவை நெட்டிசன்கள் பலரும் புரட்சி பேசும், பெண்ணியம் பேசும் அனிதாவை பாருங்க என்று விமர்சித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.