திருவள்ளூரில் சோறு வடிக்கும்போது வடிகஞ்சி கொட்டியதால் சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுமி உயிரிழந்து உள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு வடமாநிலத்தவர்கள் குடும்பமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் நந்தினி. 16 வயதான இவர், கடந்த நவம்பர் 14ஆம் தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது பாத்திரத்தில் வைத்த சோற்றை வடிப்பதற்கான செயலில் நந்தினி ஈடுபட்டு உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வடிகஞ்சி நந்தினி உடல் மீது பட்டு உள்ளது.
இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்துக் கொண்டு இருந்து உள்ளார். பின்னர், நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து, அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல் செய்த அரசுப் பேருந்து நடத்துனர்.. தர்மடியால் நிலைகுலைந்த நிலையில் மீட்பு!
இவ்வாறு ஒரு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நந்தினி, நேற்று (நவ.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.