தமிழகம்

சோறு வடிக்கும் போது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. இப்படியும் உயிரிழப்பா?

திருவள்ளூரில் சோறு வடிக்கும்போது வடிகஞ்சி கொட்டியதால் சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுமி உயிரிழந்து உள்ளார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு வடமாநிலத்தவர்கள் குடும்பமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் நந்தினி. 16 வயதான இவர், கடந்த நவம்பர் 14ஆம் தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது பாத்திரத்தில் வைத்த சோற்றை வடிப்பதற்கான செயலில் நந்தினி ஈடுபட்டு உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வடிகஞ்சி நந்தினி உடல் மீது பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்துக் கொண்டு இருந்து உள்ளார். பின்னர், நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து, அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல் செய்த அரசுப் பேருந்து நடத்துனர்.. தர்மடியால் நிலைகுலைந்த நிலையில் மீட்பு!

இவ்வாறு ஒரு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நந்தினி, நேற்று (நவ.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.