திருப்பூர் : பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலியான CCTV காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. மாதப்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் குடிநீர் பணி விநியோகிக்கும் வாட்டர்மேன் வேலை செய்து வருகிறார்.
பணி முடிந்து தாராபுரம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது கள்ளக்கிணறு அருகே சாலையை கடக்க முயன்றார்.அப்போது தாராபுரம் சாலையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்ட அப்பகுதியினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.