அரூரில் உறவினர்களுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய +2 மாணவன் உட்பட இரண்டு பேர் நின்றுக்கொண்டிருந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு பரிசோதித்ததில் இருவரும் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுத காட்சி காண்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.