அரூரில் உறவினர்களுக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய +2 மாணவன் உட்பட இரண்டு பேர் நின்றுக்கொண்டிருந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக்கொண்டு ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு பரிசோதித்ததில் இருவரும் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
பின்பு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுத காட்சி காண்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும், இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட இருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதால் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.